தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்

இயற்கை பாதுகாப்பு கட்டுரை தமிழ்

  • Save Nature Essay In Tamil

இயற்கையை அழித்தால் இயற்கையோடு சேர்ந்து மனிதனும் பிற உயிரினங்களும் அழிவை சந்திக்க நேரிடும். இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு உயிர்களின் கடமையாகும்.

மனிதனால் தான் இயற்கை பெரும் அழிவை சந்தித்து வருகின்றது என்பது கசப்பான உண்மையாகும். அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

குறிப்பு சட்டகம்

இயற்கைச் சூழல், இயற்கையின் சிறப்பு, இயற்கை மாசடைதல், இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்.

இயற்கை என்பது இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதமான படைப்பாகும். இயற்கை மனிதனுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவு பயன்களை தருகின்றது.

இயற்கையாகவே உருவாகியுள்ள நீர், நிலம், ஆகாயம், காற்று, நீர்வீழ்ச்சி, மலைகள் போன்ற அனைத்தும் எம்மைப் பிரம்மிக்க வைப்பவை ஆகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அற்புதமான இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். இதனை இக்கட்டுரையில் காண்போம்.

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. எனவே இயற்கையைக் காப்பது மிக அவசியமாகும்.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையைப் பேண வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என இயற்கையோடு வாழும் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.

பூமியானது பரந்து விரிந்த நிலப் பரப்புடன் அதனைச்சூழ சமுத்திரங்களையும் பச்சைப்பசேலென நீண்டு வளர்ந்த மரங்கள், அடர்ந்த காடுகளையும் உயர்ந்து வளர்ந்த மலைகளையும், சலசலவென ஓடும் நதிகளையும், அழகிய நீல வானையும் கொண்டது.

உயிர் வாழ்வதற்கு இயற்கை வளங்களை அனுபவித்திடவும் இயற்கை வளங்கள் சிறப்பு பெற்றுள்ளன. நிலம், நீர், காற்று உட்பட பஞ்சபூதங்கள் மனித மற்று ஏனைய உயிரின வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

பச்சைப்பசேலென செழித்து வளரும் புல்வெளிகள், பூக்கள், நீர்வீழ்ச்சிகள் உட்பட அனைத்து இயற்கை வளங்களும் மன அமைதியை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையானது அழிந்து விட்டால் மனித இனம் உட்பட ஏனைய அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். எனவே இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கை முறைகளால் இயற்கை வளம் பெரிதும் மாசுபடுகிறது. தேவைகளுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன.

தொழிற்சாலை கழிவுகளால் நீர் உட்பட நிலங்களும் மாசுபடுகின்றன. கழிவுப் பொருட்கள் கடலுடன் கலந்து பாதிப்படைகின்றது. உக்காத பொலித்தீன் பொருட்களைப் பயன்படுத்துவதால் நிலம் மாசடைகின்றது.

வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் நிலம் நச்சுத்தன்மை அடைகின்றது. தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், விண்வெளி ஆய்வுகள் போன்றவற்றால் காற்று தூய்மையை இழக்கின்றது.

இயற்கையை பாதுகாப்பது என்பது அனைத்து உலக மக்களினதும் கடமையாகும். இன்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் இயற்கையைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. பல இயற்கை பாதுகாப்புச் சட்டங்களை விதித்து நடைமுறைப்படுத்துகின்றன.

உலகில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக 1980ஆம் ஆண்டு பன்னாட்டு பாதுகாப்புச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் இயற்கை வளத்தினை வீணடிக்காது தேவைக்கேற்ப கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். காடுகளை அழிப்பதற்கு பதிலாக மரக்கன்றுகளை நாட்டி பூமியைப் பசுமையாக்க வேண்டும்.

கழிவுகளை குறைத்தல், மற்றும் கழிவுப் பொருட்களை கடலுடன் அல்லது வேறு இயற்கை நீர்நிலைகளிலும் கலக்காது உரிய முறையில் அதனை அகற்ற வேண்டும். கழிவுப்பொருட்களை மீள பயன்படுத்தும் முறையை பின்பற்ற வேண்டும்.

இயற்கையின்றி மனிதன் இல்லை. எனவே இயற்கையோடு இணைந்த இனிய வாழ்விற்கு நம்மை ஆயத்தம் செய்வோம். செயற்கை அதிகம் நிறைந்த இவ்வுலகில் இயற்கை பெரிதும் பாதிப்பினை சந்தித்து வருகின்றது.

மன நிம்மதியுடன் அனைவரும் வாழ வேண்டுமெனில் இயற்கையைப் பாதுகாப்பது மிகமிக அவசியமாகும். இயற்கையைப் பாதுகாக்காமல் நாம் செயற்படுவோமாயின் இயற்கையோடு மனித இனமும் அழிவினையே சந்திக்கும்.

எனவே இறைவனின் உன்னத படைப்பான இயற்கையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரும் பயன் பெறும் வகையில் இயற்கையை உயிர்ப்போடு வைத்திருப்பது எமது கடமையாகும்.

இதுவே காலத்தின் தேவைபாடுமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையைப் பாதுகாத்து வளம் பெறுவோமாக.

You May Also Like:

வனவிலங்கு பாதுகாப்பு

காற்று மாசுபாடு

  • Save Nature In Tamil
  • இயற்கை பாதுகாப்பு
  • இயற்கை பாதுகாப்பு கட்டுரை

All Copyright © Reserved By Tamil Katturai 2023

New Smart Tamil Logo with Stroke

  • Personalities
  • Natural Resources
  • Web Stories

></center></p><h2>இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil</h2><p><center><img style=

இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை.

ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது.

அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன.

இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil) என்று நாம் எப்போதும் சிந்தித்து செயற்பட வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்: உலக சமநிலையும் பேணப்படும்.

இயற்கையின் சிறப்பு

இயற்கையின் சிறப்பினை பற்றி நோக்கின் இப்பூமியானது கடல், ஆறுகள், குளங்குட்டைகள், சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள் என ¾ % மான நீர்ப்பரப்பினையும் மலைகள், காடுகள், சோலைகள், வயல் வெளிகள் என ¼ % மான பகுதி தரைப் பிரதேசத்தினையும் கொண்டு அமையப்பெற்றது.

அத்துடன், விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சிப் புழுக்கள் என உயிரினப் பல்வகைமையை தனக்குள் அடக்கியுள்ளது இவ்வியற்கை.

இவ்வனைத்தையும் ஒன்றினைத்தே நாம் “இயற்கை” என ஓர்பெயர்க் கொண்டு அழைக்கிறோம்.

சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழக் கூடியு ஒரே கோள் பூமியாகும். இந்த பூமியில் எண்ணிலடங்காத இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் பயன்படுத்துகிற எந்த பொருளாக இருந்தாலும் அது இயற்கை வளம் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருளாகத் தான் இருக்கும். இயற்கை இல்லையென்றால் இவ்வுலகமே இருக்க முடியாது.

இத்தனை சிறப்பும் பெருமையும் வாய்ந்த இயற்கையினை பல்வேறு வழிகளில் மாசுபடுத்தியும் வளங்களை அழித்தும் தீங்குவிளைவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

இதையும் வாசியுங்கள்:

  • ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்

இயற்கை அழிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

Save nature in Tamil

பூமியில் சனத்தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், இயற்கை பயன்பாடுகளும் அதிகரித்துச் செல்கின்றன.

இதனால், தனது தேவையை பூர்த்தி செய்வதற்காக மேற்கூறப்பட்ட சிறப்புக்கள் வாய்ந்த இயற்கையை சுயநலத்துடன் அழித்து வருகிறான் மனிதன்.

காடுகளை அழித்து கட்டிடங்களையும், மாடி வீடுகளையும், அடுக்கடுக்கான தொழிற்சாலைகளையும் உருவாக்குகிறான்.

இதனால் இயற்கையின் முதல் கருவான காடுகள் அழிந்து வளி, நீர் பற்றாக்குறை ஏற்படல், புவி வெப்பமடைதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உருவாகின்றன. அத்துடன், பிராணிகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், காடுகளை அழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதனால் இயற்கை (Iyarkai) அன்னையின் இன்னோர் குழந்தையான நீரும் அசுத்தமாவதோடு, வளியில் நச்சு வாயுக்கள் கலப்பதனால் வளி மாசடைவும் ஏற்படுகிறது.

இவ்வாறான முறைகளில் புவியில் இயற்கை மாசடைவு ஏற்படுகிறது.

இப்படியான மானிட செயற்பாடுகளால் எண்ணற்ற இயற்கை அனர்த்தங்கள் உருவாகின்றன. அதாவது, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வறட்சி போன்றவாறான இன்னல்கள் ஏற்படுகின்றன. 

காடுகளை வரையறையின்றி அழிப்பதனால் மழைவீழ்ச்சி அற்றுப்போய் அதிகபடியான வெப்பம் நிலவுகிறது. இதுவே, வறட்சியை உருவாக்குகிறது.

இதையும் வாசிக்க: 

  • நில மாசுபாடு
  • காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் அமைப்பதற்கு பசுமையான காடுகளை அழித்து தரைப் பிரதேசங்களை பொருத்தமற்றவாறு தோன்றுவதாலும் முறையற்ற அகழ்வுகளாலும் மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது.

மேலும், கிருமிநாசினிகள், பூச்சிக் கொல்லிகள் போன்ற இரசாயணப் பயன்பாடுகள் காரணமாக நிலத்தின் இயற்கை வளத் தன்மை கெட்டு வளமற்றதாக மாறுகின்றது.

அத்துடன், பிளாஸ்திக், பொலித்தீன், இறப்பர் போன்றன மண்ணுடன் சேர்வதாலும் மண் தரமற்றுப்போகிறது.

முறையற்ற மனித ஏதுக்களால் இயற்கையானது மாசுபடுகின்றது என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இயற்கையை பாதுகாக்கும் முறைகள்

இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனினதும் தலையாய கடமையாகும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை.

இயற்கையை அதிகப்படியாக பயன்படுத்தும் மனிதனே அதனை பாதுகாக்கவும் வேண்டும்.

தற்போது இயற்கை வளமானது அழிவடைந்துக் கொண்டே வருவதனால், ஊர் விட்டு ஊர் சென்றும் நாடு விட்டு நாடு சென்றும் சுற்றுலாவாக இயற்கையை கண்டு கழிக்க நேரிடும் காலமாக மாறிவிட்டது.

இந்நிலை வருங்காலத்தினருக்கு வர அனுமதிக்கக் கூடாது.

எனவே, இயற்கையை தனிமனிதன் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும். இயற்கை பாதுகாப்பு சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும்.

பொருத்தமற்ற சட்டங்களை சீர் அமைத்து மக்களுக்கு பொருத்தமான விதிகளை கொண்டு வர வேண்டும்.

ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்ற உணர்வு தோன்றுமாயின் காடுகள் அழியாது பாதுக்காக்கப்படும். காடுகள் பாதுகாக்கப்பட்டாலே இயற்கையை முழுமையாக காக்கலாம்.

  • ம ரம் வளர்ப்போம்

ஏனென்றால், மரம் என்பது இயற்கையின் மூச்சு என்று கூறலாம். காரணம் நிலம் , நீர், காற்று ஆகிய பிரதான இயற்கை வளங்களை பாதுகாக்கும் சக்தி மரங்களுக்கே உள்ளது.  

அதனால் மரங்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதனாலேயே பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டு பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

மேலும்,  இயற்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் பற்றி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேவைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவாறு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்றினாலே பாதி அழிவைத் தடுக்கலாம்.

ஏனெனில், நம்மோடு மட்டும் இவை அழிந்து போகாமல் எமது எதிர்கால சந்ததியினருக்கும் தேவை, அவர்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுவதே உத்தமமாகும்.

இதையும் வாசிப்போம்:

  • தமிழ் மொழியின் சிறப்பு
  • கணனியை கண்டுபிடித்தவர் யார்?

எனவே, இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil), உலகத்தை பலமாக்குவோம்.

Ganeshan Karthik

Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com

Related Posts

Natural Resource in Tamil

இயற்கை வளம் | Natural Resource in Tamil

Leave a comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

New Smart Tamil is a blog that contains general knowledge-related articles in the Tamil language. New Smart Tamil was founded in September 2018 by Ganeshan Karthik.

Get in Touch with Our Social Media

Quick links, explore topics, information.

  • Privacy Policy
  • Smart Tamil Trend

New Smart Tamil Copyright 2018 – 2024. All Rights Reserved. Design by Webthik

Logo

10 Lines on Nature

இயற்கையின் 10 கோடுகள்: மரங்கள், செடிகள், விலங்குகள், பூக்களின் நறுமணம், பழங்களின் இனிப்பு மற்றும் பூமியால் உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்கள் என நம்மைச் சுற்றி நாம் காணும் மற்றும் உணரும் அனைத்தும் கூட்டாக இயற்கை என்று அழைக்கப்படுகின்றன. இது மனித குலத்திற்கு திரும்பக் கிடைக்காத வரம். தண்ணீர் பாய்வது, குளிர்ந்த காற்றின் உணர்வு, பறவைகளின் சத்தம் என நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாகவும் இயற்கையைக் குறிப்பிடலாம். ஆரோக்கியமான மற்றும் பணக்கார இயல்பு மனிதர்களின் நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், இது அதன் மோசமான எதிர்மறை பக்கத்தையும் உங்களுக்குக் காட்டலாம். இயற்கையிலிருந்து சிறந்ததை நீங்கள் விரும்பினால், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

கட்டுரைகள், நிகழ்வுகள், நபர்கள், விளையாட்டு, தொழில்நுட்பம் போன்ற பலவற்றைப் பற்றிய 10 வரிகளை நீங்கள் மேலும் படிக்கலாம்.

Table of Contents

குழந்தைகளுக்கான இயற்கையில் 1 – 10 வரிகளை அமைக்கவும்

1, 2, 3, 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு செட் 1 உதவியாக இருக்கும்.

  • நம்மைச் சுற்றி நாம் பார்ப்பதும், உணர்வதும்தான் இயற்கை.
  • இயற்கை நம் தாயைப் போன்றது, நாம் எந்தத் தவறும் செய்யாதவரை ஒருபோதும் திட்டுவதில்லை.
  • நான் இயற்கையுடன் பழகுவதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் இந்த பூமியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
  • இயற்கை மிகவும் கவர்ச்சிகரமானது மற்றும் எனக்கு பிடித்த பச்சை நிறம் நிறைந்தது.
  • அது நமக்கு சுவாசிக்க காற்றையும், குடிப்பதற்குத் தண்ணீரையும், வீட்டை உருவாக்க மண்ணையும், தங்குவதற்கு நிலத்தையும் வழங்குகிறது.
  • இயற்கை நமக்கு உண்ண பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை வழங்குகிறது.
  • இயற்கையின் சமநிலையை சீர்குலைக்காமல் ரசிக்க வேண்டும்.
  • இயற்கை என்பது கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட மதிப்புமிக்க மற்றும் குறிப்பிடத்தக்க பரிசு.
  • இயற்கை நமது சிறந்த நண்பன். நாம் அதை ஆரோக்கியமாக வைத்திருக்க தோட்டம் மற்றும் வளர்ப்பு செய்ய வேண்டும்.
  • நமது இயற்கையை ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு இயற்கையில் 2 – 10 வரிகளை அமைக்கவும்

செட் 2 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  • ஒவ்வொரு முறையும் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் அளவுக்கு இயற்கை அழகாக இருக்கிறது.
  • நான் சோகமாக அல்லது துன்பத்தை உணரும்போதெல்லாம், நான் இயற்கைக்கு என்னை வெளிப்படுத்துகிறேன்.
  • இயற்கை நமக்கு வழங்கும் பல்வேறு விஷயங்களின் முக்கியத்துவத்தை நான் கற்றுக்கொண்டேன்.
  • பறவை பாடும்போது நான் அதை விரும்பி ரசிக்கிறேன். நான் அவர்களை கேட்க விரும்புகிறேன்.
  • குறிப்பாக மழை அல்லது இடியுடன் கூடிய இயற்கையை ரசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
  • இயற்கையின் அழகு நம் மனதில் எதையும் நன்றாகப் பதிய வைக்கிறது.
  • சுற்றுச்சூழலில் சமநிலையை பராமரிக்க நாம் இயற்கையை கவனித்துக் கொள்ள வேண்டும்.
  • சுற்றுச்சூழலுடன் சமநிலையுடன் விளையாடி அதன் விளைவுக்காக காத்திருக்கக்கூடாது.
  • இயற்கை நம் தாயைப் போல் அக்கறை கொண்டது. அது எப்போதும் அவளைப் போலவே இனிமையாகவும் அபிமானமாகவும் இருக்கும்.
  • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக நாம் இயற்கையை ஒடுக்கக் கூடாது.

உயர் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கையில் 3 – 10 வரிகளை அமைக்கவும்

9, 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்கும் செட் 3 உதவியாக இருக்கும்.

  • உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உயிரினங்களுடன் இயற்கை குவிந்துள்ளது.
  • இயற்கை வளர்ந்து வருவதால், அது புதிய உயிரினங்களைப் பெற்றெடுக்கிறது.
  • நமது அன்றாட வழக்கத்தில் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் அதன் தயாரிப்புகள் பெரிய மனதுடன் வழங்கப்படுகின்றன.
  • இயற்கைக்கு நிகரான தகுதி உலகில் எதுவும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • எந்தவொரு செயற்கை நுண்ணறிவும் அல்லது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரமும் இயற்கையால் வழங்கக்கூடியதை வழங்க முடியாது.
  • இயற்கையின் தாக்கம் இல்லாமல் எந்த உயிரற்ற உயிரும் எதுவும் செய்ய முடியாது. காற்று இல்லாத இடத்தில் மின்விசிறியால் பயன் இல்லை.
  • நாம் பார்க்கும் அல்லது உணரும் விதத்தில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் மில்லியன் கணக்கான எழுத்தாளர்கள் தங்கள் கவிதைகளை நெசவு செய்ய இயற்கை உதவியது.
  • இயற்கையானது அதன் ஊட்டச்சத்தை நமக்கு பகிர்வதன் மூலம் நம்மை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
  • நமது இயற்கையை எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் அழகை மேம்படுத்த நாம் மேலும் முயற்சி எடுக்கலாம்.
  • இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள தேஹிங் பட்காய் வழக்கைப் போல, இயற்கையின் நல்வாழ்வுக்கு எதிராக சில தனியார் துறைகளில் எனது அரசு எடுத்த பல தவறான முடிவுகள் உள்ளன. அவர்களுக்கு எதிராக ஒன்றுபடுவோம்.

இயற்கையின் 10 வரிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கேள்வி 1. என்ன விஷயங்கள் இயற்கையின் கீழ் வருகின்றன?

பதில்: நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், நாம் வாழும் நிலம், வீடு கட்டப் பயன்படுத்தும் மண், உண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் இயற்கையின் கீழ் வருகிறது. மலைகளின் அழகு, பூக்களின் நறுமணம், பழங்களின் சுவை போன்றவற்றை மட்டுமே உணரக்கூடிய சில தீண்டத்தகாத விஷயங்கள் உள்ளன.

கேள்வி 2. இயற்கை நமக்கு எவ்வாறு பயனளிக்கிறது?

பதில்: ஒரு மனிதனாக வாழ்வதற்கு இயற்கை நமக்கு எல்லா முக்கியமான விஷயங்களையும் தருகிறது, அது நமக்கு நன்மை பயக்கும்.

கேள்வி 3. அதன் மோசமான விளைவு என்னவாக இருக்கும்?

பதில்: இயற்கைக்கு எதிர்மறையான பக்கங்களும் உள்ளன. இயற்கையை சேதப்படுத்துவது அதன் மோசமான விளைவுகளுக்கு உங்களை இட்டுச் செல்லும். அவை நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம் மற்றும் வறட்சி போன்றவை.

கேள்வி 4. எப்படி நமது இயல்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்?

பதில்: அவற்றை சரியான முறையில் ஊட்டுவதன் மூலம் நமது இயற்கையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நமது இயற்கை வளம் மிக்கதாக இருக்க அதிக அளவில் செடிகள் மற்றும் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

Leave a Comment Cancel Reply

You must be logged in to post a comment.

© Copyright-2024 Allrights Reserved

தமிழ் சுடர்

Thamizh sudar, இயற்கை வளங்கள் கட்டுரை.

  • iyarkai valam katturai in tamil

இயற்கை வளங்கள் கட்டுரை

உயிர்களின் பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உலகின் நிலைத்தன்மையை பேணுவதாகவும் இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.

இன்று இயற்கை வளங்கள் அழிந்து வருவதை பார்க்கும் போது பெரும் மனவருத்தத்தை தருகின்றது.

குறிப்பு சட்டகம்

இயற்கை வளங்கள், இயற்கை வளங்களின் முக்கியத்துவம், இயற்கை வளங்களின் அழிவு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு.

இயற்கை எமக்கு அளித்த அரிய கொடை இயற்கை வளங்கள் ஆகும். ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை மனித வாழ்க்கை இயற்கை வளங்களையே சார்ந்துள்ளது. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே நம் முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தார்கள்.

ஆனால் இன்று அதிகரித்த நகரமயமாதல், தொழில்மயமாதல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இயற்கை வளங்கள் இயற்கை எய்திக்கொண்டிருக்கின்றன. இதனால் மொத்த உயிரினங்களின் வாழ்வியலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இயற்கையில் இருந்து கிடைக்கப் பெறும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். உயிர்கள் படைக்கப்பட்ட போதே அவற்றுக்கு தேவையான இயற்கை வளங்களும் சேர்த்து படைக்கப்பட்டுள்ளன.

இயற்கை வளங்களுக்கு எடுத்துக்காட்டாக காடுகள், நீர், கடல், கனிம வளங்கள், மலைகள், சமவெளிகள், சூரிய ஒளி போன்றவற்றை குறிப்பிட முடியும்.

இவை மனித தலையீடுகளின்றி தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதியில் காணப்படுவனவாகும். இவை மனிதனால் உருவாக்க முடியாத அரிய வளங்கள் ஆகும். இவையின்றி மனிதனால் தனித்து இயங்க முடியாது.

மனித நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் இயற்கை வளங்களின் பங்களிப்பு இருக்கின்றது. இயற்கை மூலதனமாக, உணவுக்காக, தங்குமிடத்திற்காக, மருத்துவத்திற்காக, வேலைவாய்ப்புக்காக, தேசிய வளர்ச்சிக்காக என இயற்கை வளங்கள் மனித வாழ்வியலோடு ஒருமித்துள்ளது.

அவ்வாறே அனைத்து உயிரினங்களினது வாழ்வும் இயற்கையை சார்ந்தே இருக்கிறது. பல நாடுகளில் அங்குள்ள இயற்கை வளங்களைப் பொறுத்தே அந்த நாட்டின் பொருளாதார நிலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆதலால் அவற்றை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.

அறிவியல் வளர்ச்சி காரணமாக இயற்கை வளங்கள் இயற்கை எய்திக்கொண்டிருக்கின்றன. அருமையான இயற்கை வளங்களை அருங்கொடைகளாக எண்ணி பயன்படுத்தாமல் சுயநல நோக்குடன் பயன்படுத்தி அவற்றின் அழிவுக்கு காரணமாக இருக்கிறோம்.

பசுமரக் காடுகளை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து தொழிற்சாலை கழிவுகளால் சூழலை மாசுபடுத்தி இயற்கையின் தட்ப வெப்ப நிலைகளையும் சீர்குலைத்து உயிரினங்கள் வாழ தகுதி இல்லாத சூழலாக இப்புவியை மாற்றியமைத்து எமது மற்றும் எதிர்கால சந்ததியினுடைய வாழ்வை கேள்விக்கு உட்படுத்தியுள்ளோம்.

பூகோளமயமாதலால் புவி வெப்பமடைதல், நீர்நிலைகள் மாசடைதல், பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வியலை சீர்குலைத்தல் என இயற்கையின் வளங்களை சுரண்டி இயற்கையின் சீற்றங்களாலும் அல்லலுறுகிறோம்.

மனிதன் இப்புவியில் உயிர் வாழ மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல அற்புதங்களை நிகழ்த்தித்ததந்த இயற்கையின் கொடைகளை பாதுகாத்து எம் எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

நீர், மின்சாரம், கடதாசிகள், பெற்றோலியம் என்பவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வருங்கால தலைமுறையை கருத்தில்கொண்டு பசுமையான மரஞ்செடிகொடிகள், உயிரினங்கள், நீர்வளம், நிலவளம்,  கனிய வளம் ஆகியவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் கல்லும் மண்ணும் உள்ள பாலைவனம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் திகதி  உலக இயற்கை வள பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

இயற்கை வளங்கள் நமக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்து அல்ல. எம்மை தொடர்ந்து வரும் எதிர்கால சந்ததியும் பயன்படுத்த இடமளிக்கும் வகையில் அவற்றை சிக்கனமாக நுகர வேண்டும்.

அளவுக்கு மீறி நுகர்வது சட்டவிரோத செயல் ஆகும். இவ்வாறாக இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிப்பதன் மூலமாக மட்டுமே இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்.

இயற்கையின்றி மனிதனால் வாழ இயலாது, மனிதகுல வாழ்வே இயற்கையை நம்பித்தான் இருக்கிறது என்ற நிதர்சனத்தை புரிந்து இயற்கை வளங்களை பாதுகாப்பை எம் தலையாய கடமையாக கொண்டு செயற்படுவோமாக.

You May Also Like:

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

Copyright © 2024 | ThamizhSudar

தின தமிழ்

காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil

Photo of dtradangfx

காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கிய காரணியாக திகழ்கிறது .நாம் வாழும் பூமியை சமநிலையில் வைப்பதில் காடுகள் மிகுந்த பங்கு வகிக்கின்றன.காடுகளை பாதுகாப்பதே இயற்கை நமக்கு கொடுத்துள்ள இந்த வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வழிவகுக்கும்

trees on forest at daytime

இந்த மிக மிஞ்சிய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகளின் அழிவு துரிதமான அளவில் வளர்ந்து வருகிறது .இதன் காரணமாக இயற்கை மிக ஆபத்தான இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

காடுகளை சார்ந்து வாழும் காட்டு மிருகங்கள் மிக ஆபத்தான நிலைக்கு செல்ல காடுகள் அழிப்பு ஒரு காரணமாகும். விலங்குகள் மற்றும் பறவைகளின் அழிவு மனிதர்களின் வாழ்வியல் சுழற்சியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.காடுகளில் இருந்து மனிதர்கள் வாழும் இடங்களுக்கு காட்டு மிருகங்கள் இடம் பெயர்ந்து நமக்கு ஆபத்தை விளைவிப்பதை நாம் தினம் செய்திகளில் பார்ப்பது தொடர்கிறது .

காடுகள் அவற்றின் பரப்பளவை நாளுக்கு நாள் இழந்து வருகிறது அவற்றை தடுக்க உலகிலுள்ள அணைந்து நாடுகளும் சட்டங்கள் இயற்றி வருகின்றன.

காடுகளின் சிறப்பை மாணவர்களுக்கு சிறுவயது முதலே பள்ளி பாடங்கள் மூலமாக கற்பித்தல். சமூக வலைத்தளங்கள் மூலமாக சிறந்த விளம்பரங்களை வெளியிடுதல் .காவலர்கள் கொண்டும் பொது அதிகாரிகளை கொண்டும் நமது காட்ட காப்பது நமது கடமையாகும்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

எனது கதாநாயகனாகிய எனது தந்தை கட்டுரை - My Father My Hero Essay For Children in Tamil

ஒரு இன்ச் எத்தனை சென்டிமீட்டர் கன்வெர்ட்டர், related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023

தமிழ் டிப்ஸ்

  • [ October 20, 2023 ] தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் Health
  • [ October 20, 2023 ] விந்தணு குறைபாடு அறிகுறிகள் Health
  • [ October 20, 2023 ] சமத்துவமே மகத்துவம் கட்டுரை கட்டுரைகள்
  • [ October 20, 2023 ] பூமி நமக்கு சொந்தமானது அல்ல நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் கட்டுரை கட்டுரைகள்
  • [ October 20, 2023 ] மண் வளம் காப்போம் கட்டுரை கட்டுரைகள்

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்

  • Iyarkai Kappom Katturai In Tamil

இந்த பதிவில் “ இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ் ” பதிவை காணலாம்.

நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிணைத்து வாழ்ந்தார்கள் ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னி பிணைந்து வாழ்கின்றோம்.

இயற்கையை பாதுகாத்து அதை நம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொரு உயிர்களிதும் தலையாய கடமையாகும்.

  • இயற்கையை காப்போம் கட்டுரை

Table of Contents

  • இயற்கையை காப்போம்

இயற்கையின் சிறப்பு

இயற்கை மாசடைதல், இயற்கை அனர்த்தங்கள், இயற்கையை பாதுகாத்தல்.

இந்த உலகமானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. இவ்வியற்கையின் கொடைகளுடன் இணைந்து வாழும் படியாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

மனிதன் இப்பூமியில் நீடித்து வாழும் பொருட்டு இயற்கை அதன் கொடைகளை இவ்வுலகிற்கு வாரிவழங்கியுள்ளது. உண்கின்ற உணவில் இருந்து அருந்துகின்ற குடிநீர் வரை இயற்கை மனிதவாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

ஆனால் அண்மைக்காலமாக இயற்கையானது அளவிடமுடியா பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. அவற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டுமாயின் இயற்கையை பற்றி முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

இந்த பூகோளமானது பரந்து விரிந்த நிலப்பரப்புக்களையும், அதன் நாற்புறமும் சூழப்பட்ட சமுத்திரங்களையும், பச்சைப்பசேலென்ற காடுகளையும், எழில்கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளையும், சலசலத்து ஓடுகின்ற ஆறுகளையும் வளங்களாக கொண்டமைந்துள்ளது.

அந்த வளங்களை அனுபவித்திட மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரினங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ளது.

பூமியில் இவ்வுயிரினங்கள் நிலைபெற்று வாழ மழை, காற்று, தீ, நிலம், நீர் போன்ற பஞ்சபூதங்களையும் கொண்டமைந்துள்ளது.

இந்த இயற்கையானது செழித்து விளங்காவிட்டால் மனித இனமானது அழிவுற்றுவிடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இயற்கையில் உள்ள விலைமதிக்க முடியாத வளங்களான நிலம், நீர், காற்று போன்றன பல்வேறுபட்ட காரணங்களால் மாசடைதலே இயற்கை மாசடைதலாக கருதப்படுகின்றது.

இந்த மாசடைதலிற்கு அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் கைத்தொழில் மயமாக்கலோடு மனிதர்களது விரும்பத்தகா நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன.

உலகத்தின் அழகிய பரந்த நிலப்பரப்பானது பல்வேறுபட்ட காரணங்களால் அதன் இயல்புத் தன்மையை இழந்து வருகின்றது.

இறப்பர், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிலத்தினுள் எரிக்கும் போதோ அல்லது புதைக்கும் போது மண்வளம் அற்றுப்போகின்றது. மேலும் இரசாயன கிருமி நாசனிகளை பயிர்களிற்கு தெளிக்கும் போது மண் மாசடைகின்றது.

அண்மைக்காலங்களில் சூழலை அச்சுறுத்திவரும் ஒரு செயற்பாடாக மண் அகழ்தல் இடம்பெற்று வருகின்றது. கடற்கரை மற்றும் ஆற்றுப்படுக்கையில் உள்ள மண் அகழ்வுக்கு உட்படும் போது நீரானது ஊர்மனைகளிற்குள் புகும் அபாயம் எழுந்துள்ளது.

நீரின் பயனை வள்ளுவர் “புறத்தூய்மை நீரான் அமையும்” என்று குறிப்பிடுகின்றார். மனித வாழ்க்கையில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கும் நீரானது குப்பை கூழங்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்ர்நிலைகள் மீது கொட்டுவதாலும், நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததாலும் மாசடைகின்றது.

மேலும் ஆழ்துளைகிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதனால் நிலத்தடி நீரானது அற்றுப்போகின்றது.

இந்த உலகத்தில் மனிதவாழ்க்கைக்கு அவசியமாய் விளங்கும் மற்றொரு காரணி வளி. ஏனெனில் எந்தவொரு மனிதனாலும் சுவாசிக்காமல் இருக்கமுடியாது.

இந்த வளியானது புகைபோக்கிகளில் இருந்து வெளியேறும் அதிகபுகை மற்றும் நச்சுவாயுக்கள் கலக்கும் போது அசுத்தமடைகின்றது.

காடுகளை அழிப்பதனாலும் கனியவளங்களை அகழ்வதனாலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இவ்வாறு இயற்கையின் கிடைத்தற்கரிய கொடைகள் மனிதசெயற்பாடுகளால் அழிவிற்குட்பட்டு வருகின்றன.

இயற்கையானது மனித செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, இயற்கையாகவே நிகழும் சில நிகழ்வுகளாலும் அழிவுக்குள்ளாகின்றது.

உதாரணங்களாக சுனாமி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பனிப்பொழிவு மற்றும் காட்டுத்தீ போன்றவற்றை குறிப்பிடலாம்.

மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இவ்வனர்த்தங்களால் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களும் அழிவடைகின்றன.

பல உயிர்களை காவுகொண்ட இயற்கை பேரழிவிற்கு உதாரணமாக 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்ப்பட்ட சுனாமியை குறிப்பிடலாம்.

இயற்கை அனர்த்தங்களாலும் விலை மதிக்க முடியாத இயற்கையானது அழிவிற்கு உள்ளாகின்றது.

இயற்கையை பாதுகாப்பது தனிமனிதர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

இயற்கை வளங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் 1980 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு உலகபாதுகாப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் 28ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனிதர்கள் அனைவருமே இயற்கையை தேவைக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.

நீரை வீண்விரயம் செய்யாது பயன்படுத்துவதோடு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டும்.

மரங்களை வெட்டுதலை தடுத்து நிறுத்துவதோடு எங்களால் இயன்றளவு மரங்களை வளர்த்து இப்பூமியை பசுமையானதாக மாற்றவேண்டும்.

செயற்கை அதிகம் மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மனநிம்மதியை திரும்பபெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான்.

இயற்கை சூழலில் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கையை காண சுற்றுலா செல்லும் நிலைமையை மனிதன் எதிர்நோக்கியுள்ளான்.

இன்னும் சிலகாலம் இந்நிலைமை தொடருமாயின் இயற்கையோடு சேர்ந்து மனித இனமும் அழிந்து விடக்கூடிய அபாயம் உள்ளது.

இதற்கான உடனடியான தீர்வு இயற்கையை தேவைக்கேற்ப பயன்படுத்தி அதனைப் பாதுகாத்தலாகும்.

எனவே இயற்கைவளங்களை எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்போடு வைத்திருந்து நாமும் நலம் பெற்று வாழ்வோமாக.

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

  • Iyarkai Kappom
  • Iyarkai Kappom Katturai
  • இயற்கையை காப்போம் கட்டுரை தமிழ்
  • இயற்கையை பாதுகாப்போம்
  • இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

Copyright © Reserved By All Tamil Tips 2023

logo

  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • சிறப்புக் கட்டுரைகள்
  • சினிமா செய்திகள்
  • பிற விளையாட்டு
  • கல்வி/வேலைவாய்ப்பு
  • இன்றைய பலன்
  • வார ராசிபலன்
  • மாத ராசிபலன்
  • சுப முகூர்த்த நாட்கள்
  • வாஸ்து நாட்கள்
  • விரத நாட்கள்
  • புகார் பெட்டி
  • உலக கோப்பை கிரிக்கெட்
  • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கர்நாடகா தேர்தல்
  • டி20 உலகக்கோப்பை
  • ராமர் கோவில் ஸ்பெஷல்
  • தேர்தல் முடிவுகள்
  • மத்திய பட்ஜெட் - 2023
  • 5 மாநில தேர்தல் முடிவுகள்
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
  • ஐபிஎல் 2022
  • உலக கோப்பை கால்பந்து - 2022
  • ஆசிய விளையாட்டு
  • ஒலிம்பிக் 2024

logo

இயற்கையை காப்பாற்றுவோம்

essay about nature in tamil

இயற்கையுடன் நமது உறவு முற்காலத்தில் தாய் -சேய் உறவு போல அற்புதமாக இருந்தது.

தினத்தந்தி

  • இயற்கை 
  • nature 

மேலும் செய்திகள்

ஆசிரியரின் தேர்வுகள்..., அதிகம் வாசிக்கப்பட்டவை.

essay about nature in tamil

  • சிறப்பு கட்டுரைகள்

"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust

essay about nature in tamil

எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு

Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)

essay about nature in tamil

  • ஆசிரியர் பக்கம்
  • மாவட்ட வீடியோக்கள்
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • திருவண்ணாமலை
  • தூத்துக்குடி
  • இன்றைய ராசி பலன்
  • வார ராசி பலன்கள்
  • வருட ராசி பலன்கள்
  • கோவில் செய்திகள்
  • சனி பெயர்ச்சி 2022
  • குரு பெயர்ச்சி
  • ராகு கேது பெயர்ச்சி
  • திரைப்படங்கள்
  • தொலைக்காட்சி
  • கிசு கிசு கார்னர்
  • திரைத் துளி
  • திரைவிமர்சனம்
  • ஆரோக்கியம்
  • சமையல் குறிப்புகள்
  • வீடு-தோட்டம்
  • அழகு..அழகு..
  • தாய்மை-குழந்தை நலன்
  • உலக நடப்புகள்
  • கார் நியூஸ்
  • பைக் நியூஸ்
  • கார் தகவல் களஞ்சியம்
  • தொழில்நுட்பம்
  • விளையாடுங்க
  • பிரஸ் ரிலீஸ்

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி நம்மாழ்வார்

Earth

நெல்லை ரோஸ் மேரி கல்வி நிறுவனங்கள் சார்பில் பூமி பாதுகாப்பு விழா கே.டி.சி. நகரில் நடந்தது. தாளாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். இயக்குனர்கள் ஷெரின் அரவிந்த், ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது,

பூமித் தாயை காப்பாற்ற வேண்டிய கடைமை நம் அனைவருக்கும் உள்ளது. பூமி நலமாக இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். பூமி வெப்பமாதலுக்கு காடுகள் அழிக்கப்படுவதுதான் காரணமாகும். தட்பவெட்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் பூமி வெப்பமாகிறது.

பூமிக்கு மனிதனால் ஏற்படும் அழிவுகளால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக சத்துணவு கிடைக்காமல் கர்ப்பிணிகள், குழைந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மனித வாழ்க்கையில் சமத்துவம் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

இயற்கையை விட்டு விலகி வாழ்ந்து வருகிறோம். இதனால் மனிதன் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறான். வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு பூமியை காப்பாற்ற வேண்டும்.

இயற்கை அழிவதை தடுக்க வேண்டும். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். பூமியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள் கையில் உள்ளது. இதற்காக ஓய்வு நேரத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சர்வதேச விண்வெளி மையத்திற்குள் புகுந்த நுண்ணுயிரி.. விண்வெளி வீரர்களுக்கு சிக்கல்.. என்ன நடந்தது?

பூமி பாதுகாப்பு மாணவர்கள் விஞ்ஞானி earth protection global warming students scientist

 தமிழக அரசு வேலை.. டிஎன்பிஎஸ்சி குட்நியூஸ்.. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு முழு விவரம்

தமிழக அரசு வேலை.. டிஎன்பிஎஸ்சி குட்நியூஸ்.. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு முழு விவரம்

நார்வே இளவரசி எடுத்த முடிவு! "மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்" திருமணம்! ஸ்டன்னான ராஜ குடும்பம்

நார்வே இளவரசி எடுத்த முடிவு! "மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்" திருமணம்! ஸ்டன்னான ராஜ குடும்பம்

 தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்..அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை

தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்..அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை

Latest updates.

கலங்கிப்போன கங்கனா ரனாவத்.. ‛எமர்ஜென்சி’ படத்தின் தணிக்கை சான்றுக்கு சிக்கல்! காரணமான மிரட்டல்

  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

essay about nature in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

facebookview

Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu
  • Tamil Essays

Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil)

' src=

Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை மனிதனின் அத்யாவிசய தேவைகளில் ஒன்றாக நாம் சொல்லலாம் . மரங்களின் அழிவு மனிதனின் அழிவு ,அத்தகைய மரத்தை பற்றி நாம் இந்த கட்டுரையில் காணலாம்

Maram katturai in Tamil

மரம் கட்டுரை

மனிதன் உயிர்வாழவே மரத்தின் துணை தேவை என்ற போதிலும் , மரத்தினால் நமக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகள் ஏராளம் .காடுகள் அழிப்பு மூலமாக கடந்த களங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கலைவதே அனைத்து அரசுகளின் முக்கிய நோக்கமாக இன்று உள்ளது .

மரங்களின் தேவை

  • புவி வெப்பமயமாதலை தடுக்க மரமே நமக்கு உறுதுணையாகும்
  • காற்றில் ஆக்ஸிஜன் அளவை கட்டுக்குள் வைக்க
  • மனிதன் மற்றும் விலங்குகளுக்கு நழல்தர
  • பறவைகளுக்கு வீடாக மரமே உள்ளது
  • நீர் சுழற்சியின் முக்கிய அங்கமாக மரங்களே உள்ளன

தற்போதைய காலகட்டத்தில் முக்கிய பிரச்னையாக ஐநா சபை கருதுவது புவி வெப்பமயமாதல் பிரச்னையைத்தான்.இப்பிரச்னையை தவிர்க்க காடுவளர்ப்பே ஒரு முக்கிய ஆயுதமாகும்

அறிவியல் வளர்ச்சியில் வாகனங்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகும் , வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை ஆக்ஸிஜன் வாயுவாக மாற்றுவது மரங்களே ஆகும் . அதிக மழை பெற அதிக மரங்கள் நட வேண்டியது அவசியமாகிறது

காடு வளர்ப்பு

மனித கலாச்சாரத்தின் ஆரம்பம் தொட்டே மரங்களின் துணை கொண்டு வீடுகட்டும் பழக்கம் உள்ளது , மேலும் பேப்பர் , எரிபொருள் போன்ற காரணங்களுக்காகவும் மரங்களை வெட்டும் பழக்கம் அதிகமாக உள்ளது . புதிய மரங்களை நடுவதின் மூலமாக மரங்களின் எண்ணிக்கையை சரி செய்யலாமே தவிர பெரிய மரங்கள் தரும் பயன்களை இன்று நட்ட செடிகளின் மூலம் பெற இயலாது. எனவே ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு எண்ணிக்கையில் மரங்களை நடுவது அவசியமாகிறது .

இன்றைய காலகட்டத்தில் மரம் இல்லாமல் நாம் உயிர் வாழவே முடியாது என்ற நிலை இருப்பதால் ,மரங்களை பாதுகாத்தல் நம்மை பாதுகாத்தல் ஆகும்

மேலும் கட்டுரைகளுக்கு

Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil

Tamilar Panpadu Katturai in Tamil – தமிழர் பண்பாடு கட்டுரை

My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை

kalvi katturai in tamil – கல்வி கட்டுரை

Photo by  Alexander Tiupa  from  Pexels

  • Pingback: Tamil essay writing competition topics | Tamil Katturaigal | Katturai in Tamil Topics - Tamil Solution

IN FIRST PARA THERE IS A MISTAKE

We corrected it thanks for the response

Comments are closed.

' src=

You Might Also Like

Kamarajar essay in tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை, karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை, noolagam katturai in tamil – நூலகம்.

THIRUVALLUVAR’S OBSERVATION ON NATURE: A STUDY ON THE CLASSICAL TAMIL TEXT THIRUKKURAL

Dr.Kalaiarasan M at Affiliated to Bharathiar University

  • Affiliated to Bharathiar University

Discover the world's research

  • 25+ million members
  • 160+ million publication pages
  • 2.3+ billion citations
  • Padmanabhan
  • Recruit researchers
  • Join for free
  • Login Email Tip: Most researchers use their institutional email address as their ResearchGate login Password Forgot password? Keep me logged in Log in or Continue with Google Welcome back! Please log in. Email · Hint Tip: Most researchers use their institutional email address as their ResearchGate login Password Forgot password? Keep me logged in Log in or Continue with Google No account? Sign up

The Hindu Logo

  • Entertainment
  • Life & Style

essay about nature in tamil

To enjoy additional benefits

CONNECT WITH US

Whatsapp

Nature writing in Tamil

Updated - December 24, 2013 06:39 pm IST

Published - December 22, 2013 02:33 pm IST - chennai

Old Picture

Old Picture

Going through some old papers the other day, I came across some of Theodore Baskaran’s writings that I had marked here and there for use in this column on the occasion of the centenary of the birth of that renowned naturalist, writer and photographer, M. Krishnan, in 2012. I had, however, mislaid them — and lost then the opportunity of writing about his contribution to the Tamil world of letters, something I had then known little about. Now that I’ve found them, better late than never in spreading the message.

As the son of the well-known Tamil writer P.A. Madhaviah, it was almost inevitable that Krishnan would write as well in Tamil as he did in English. In fact, that appears to have been true of all of Madhaviah’s children. Indeed, a collection of short stories titled Munnila (1944) had contributions from six of Madhaviah’s children, including two by Krishnan.

When Krishnan started writing in the 1930s, his contributions were to Tamil magazines and focused on short stories and essays. Nature was not something he wrote about; that was not something anyone did at the time in Tamil. As Baskaran writes, “… writings on natural history are rare in contemporary Tamil. Magazines and dailies publish very little on the subject. Even in the scanty news coverage that appears on wildlife, there is confusion over nomenclature, words and phrases dealing with creatures and habitats. So a special terminology for the subject has not been developed, there is practically no discourse on the concepts and ideas of conservation, and ‘Green’ literature is simply absent.”

The exception to this trend was when, at a later period in his writing, between 1947 and 1957, Krishnan wrote a series on Nature and wildlife first for Kalaimagal and then for Kalki . He strongly believed that a country was something more than just people. Its natural terrain, all the fauna and flora that flourished in it, and nature’s contribution that affected both were as important to study and write about as those who lived in it.

In writing about wildlife and the environment, Krishnan drew much from traditional knowledge, according to Baskaran. He used ancient names for the fauna and flora and natural features, names which even most Tamil speakers had forgotten. If his Tamil writings on natural history were an effort to change this situation, I must say it was not very successful; protecting wildlife and conserving nature remain issues to which mainly Western-oriented, English speakers pay greater attention. I wonder whether this is why Krishnan began to write less in Tamil on these subjects from the 1960s.

Besides being an outstanding wildlife photographer, Krishnan was also a good illustrator, specialising in pen-and-ink line drawings; he had had a stint at the School of Arts and Crafts in Madras. A man seated, with his Kombai dog by his side, was an illustration of his for the cover of a book that is considered his last work in Tamil, Kathiresan Chettiyarin Katha . Described by Krishnan as “a thriller”, it was published posthumously, shortly after his death in 1996.

The striking picture by Krishnan that accompanies this item appeared in c.2000 in Blackbuck , the journal of the Madras Naturalists’ Society. Sadly, that very readable and informative journal called it a day a few years ago. It’s a magazine deserving revival. Is there someone out there generous enough to help?

1950s’ banking in George Town

Recalling his days as a banker in George Town in the 1950s, A.M.V. Alagappan draws attention to a few banks of his time there that have closed or got new identities.

Banks now missing from the George Town scene are the Pandyan Bank, Eastern Bank, Indo-Commercial Bank, Lloyd’s Bank, National Bank of India and Mercantile Bank of India.

The Pandyan Bank, started by Madurai businessman S.N.K. Sundaram, had its Madras branch on Armenian Street, opposite St. Mary’s Hall. It attained considerable success within a few years through such innovative schemes as providing plastic pouches for savings bank pass-books, a novelty which induced many to open savings bank accounts — with just Rs. 10. More significantly, it pioneered in India an all-women’s branch, establishing one in Madurai in 1947. There were ten women ‘manning’ the branch, including Kamala, Sundaram’s daughter. The Pandyan Bank with its 80 branches was merged with the Canara Bank in 1963, when several of the major banks that had only then recently been nationalised took over many of the smaller regional banks and acquired greater local area spreads, particularly in rural areas. Another such bank that merged with a bigger bank was S.N.N. Sankaralingam Iyer’s Indo-Commercial Bank, founded in 1934, that merged with the Punjab National Bank. The Madras branch of Indo-Commercial was at the Errabalu Chetty Street-Armenian Street corner. Sankaralingam Iyer was the father of K.S. Narayanan, founder of the Sanmar Group.

On Armenian Street, opposite Binny’s, was the London-headquartered Eastern Bank and on Esplanade Road, near Parry’s Corner, was another British bank, Lloyd’s. The Lloyd’s branch was closed down after Independence and the Eastern Bank was taken over by the Chartered Bank in 1957.

The large British banks that slowly changed their identity in phases, retaining bits of their old names in their new avatars, before vanishing altogether, were the Chartered Bank of India, Australia and China, the National Bank of India, and the Mercantile Bank of India. The first-named had its own building at the corner of Esplanade Road and Armenian Street. The National Bank built a handsome Indo-Saracenic building on First Line Beach (now Rajaji Salai), just behind Parry’s, and moved into it in 1915. The Chartered Bank of India, Australia and China became the Chartered Bank, then, after merging with the Standard Bank of South Africa in 1969, the Chartered Bank. The National Bank merged with Grindlay’s Bank on Armenian Street and became the National Grindlay’s in the new building that was a far cry from the dignified Indo-Saracenic building that was a landmark on First Line Beach. Further down the road was the Mercantile Bank of India’s handsome building into which it moved in 1893. The London-headquartered Mercantile Bank, in the city from the 1850s, was taken over by the Hong Kong and Shanghai Banking Corporation (HSBC Bank) not so long ago. A neighbouring building was till recently the Indian Bank’s headquarters. On this site was the infamous Arbuthnot bank, whose property its successor institution, the Indian Bank, acquired.

Also no longer on First Line Beach is the Reserve Bank of India which shared space with the Imperial Bank of India in what is now the main branch of the State Bank of India.

In how many of these old banks that remain are there memories of their beginnings or of those they took over?

When the postman knocked…

• Descriptions short of stupid were part of the several letters the postman brought me on the correct spelling of that railway junction ‘Kazipet’ (Miscellany, December 9). All you had to do was Google the Indian railway map and you would have had your answer, many wrote. Unfortunately, as many know, I’m computer illiterate so have to rely on the printed or spoken word. And the atlases I referred to did not have Kasipet or Kazipet — and they’re pretty good atlases. Be that as it may, my correspondents, after referring to the railway map, tell me that it is Kazipet, not Kasipet — Kazi is a Muslim law officer and Kasi is Varanasi or ash-gourd, one adds — and it is the junction near Warangal on the Grand Trunk Chennai-Delhi route from where a branch line heads to Hyderabad.

• Kumaran Sathasivam, referring to the restoration of the Madurai Palace (Miscellany, December 9) tells me that William and Thomas Daniell had found it in a terrible state of repair in the 1790s, “….. (of) little more use than affording shelter to cattle.” The Daniells, who painted various views of the Palace as they found it, go on to add, “The ruins of the palace at Madura show evident marks of its former grandeur; many of the buildings appear to have suffered much by time, and not inconsiderably….by the destructive effects of war; a few, however, are sufficiently in repair to be converted into use by the garrison as granaries, store-houses, powder magazines.” My correspondent wonders whether there are any records that describe the Palace as it was when it was newly built. In this connection, G. Muhammad points out that Philip Davies lists it as an Islamic monument of India in the two-volume Monuments of India published by Viking.

Related Topics

Chennai / history / Friday Review / The Hindu MetroPlus

Top News Today

  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products

Terms & conditions   |   Institutional Subscriber

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.

  • UK & Europe
  • United States
  • Meet Sadhguru
  • Sadhguru Radio
  • Sadhguru Quotes
  • Youth N Truth
  • Beginner's Programs
  • Free Yoga & Guided meditation
  • Inner Engineering
  • Isha Health Solutions
  • See all beginner programs
  • Advanced Programs
  • Bhava Spandana
  • Shoonya Meditation
  • Additional Programs
  • Sadhanapada
  • Sacred Walks
  • See all additional programs
  • Children's Programs
  • Become a Teacher
  • Monthly Events
  • Free Yoga Day
  • Pancha Bhuta Kriya
  • Online Satsang
  • Annual Events
  • Lunar/Hindu New Year
  • Guru Purnima
  • Mahashivratri
  • International Yoga Day
  • Mahalaya Amavasya
  • Special Events
  • Ishanga 7% - Partnership with Sadhguru
  • Yantra Ceremony With Sadhguru
  • Sadhguru Sannidhi Sangha
  • Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri
  • Ecstasy of Enlightenment with Sadhguru
  • Sadhguru in Chennai

Main Centers

  • Isha Yoga Center
  • Sadhguru Sannidhi Bengaluru
  • Sadhguru Sannidhi, Chattarpur
  • Isha Institute of Inner-sciences
  • Isha Yoga Center LA, California, USA
  • Local Centers

International Centers

  • Consecrated Spaces
  • Adiyogi - The Source of Yoga
  • Adiyogi Alayam
  • Dhyanalinga
  • Linga Bhairavi
  • Spanda Hall
  • Theerthakunds
  • Adiyogi - The Abode of Yoga
  • Mahima Hall
  • Online Medical Consultation
  • In-Person Medical Consultation
  • Ayurvedic Therapies
  • Other Therapies
  • Residential Programs
  • Diabetes Management Program
  • Joint and Musculoskeletal Disorders Program
  • Sunetra Eye Care
  • Ayur Sampoorna
  • Ayur Rasayana Intensive
  • Ayur Rasayana
  • Pancha Karma
  • Yoga Chikitsa
  • Ayur Sanjeevini
  • Non-Residential Programs
  • Obesity Treatment Program
  • ADHD/Autism Clinic
  • Cancer Clinic
  • Conscious Planet

logo

சத்குருவின் இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature)

இயற்கையின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அப்படி இருந்தாலும், ஒரு ஞானியின் கவிதைகள் இயற்கையின் விநோதங்களைப் பற்றிய முற்றிலும் புதிதான பார்வையை நமக்கு வழங்கவல்லது. இயற்கையைப் பற்றிய சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...

இயற்கை கவிதை, Tamil Kavithaigal about Nature

உள்ளடக்கம்

இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature)

பருவமழை, Rain

ஓ! என்னே ஒரு வரம்! வறண்ட நிலம் பெறுகிறது... தொலைந்த காதலரைப் போல - என்றும் மிகச்சரியான தருணத்தில்

அனைத்து உயிர்களும்  அமைதியான கொண்டாட்டத்தில்

பலத்த மழை பாதிப்பானால் பவ்யமாய் வணங்குவோம் - ஆனால்  எப்போதும் எதிர்க்க மாட்டோம்

வெள்ளத்தில் மடிந்தோருக்கு வருந்துவோர் யாருமில்லை பஞ்சத்தின் அழிவிலிருந்து நாம்  பிழைத்திருக்கும் காரணத்தால்

அருள் பெற்ற துளிகளாய் அவை தரையிறங்கி வந்து தன் கருவில் விதையை  தன்னுள் முன்பே கொண்டிருக்கும் நம்  தாயை கருத்தரிக்கச்செய்வது போல

எந்த ஹார்மோனோ ஊக்கியோ இந்த வளர்ச்சியின் வீரியத்துக்கு  காரணியாகவில்லை 

ஓ! பருவமழை! என்றும் மிகச்சரியான தருணத்தில்

அன்பும் அருளும், சத்குரு

essay about nature in tamil

கொட்டும் மழையும் செம்மண்ணும்  கூடி ஒன்றாக கலந்தன -  தணியாத தாகத்தில் கிளர்ச்சியின் மூட்டத்தில்  தானென்ற அனைத்தையும் அழித்து ஒன்றிணைந்து மற்றவரை அறியும் ஒரே முனைப்போடு இருக்கும் காதலரைப் போல...

தன்னையே அழித்து  தான் மற்றவராய் தரிக்க வேண்டுமென்ற தீராத ஏக்கம்...

அழியா இறைமையின் கை இவரை பிரித்தது அழியும் பொம்மைகளாய் பின்னர் சேர்க்கவே

செம்மண்ணும் கொட்டும் மழையும்  சேறாவதற்காக சேரவில்லை - சேர்ந்தன உயிருக்கு உயிரூட்ட... இறந்தவை இறந்தவையாய் இருக்க...

மரமாய் மலராய் கனியாய் மாற வானும் மண்ணும் வாஞ்சையோடு முத்தமிட்டு இணையும்  இப்பூமியில் உயிர்கள் பெருகும் இவ்வுயிரில் தான் இறைமையும் ஆர்ப்பரிக்கும்

நிலா, Moon

மாறும் உன் வடிவியல் தோற்றம் மனக்கவலைக்கான காரணம் ஏனெனில், பெருங்கடல்கள் பொங்கும். மாதவிடாய் காணும் மாந்தரை பேரார்வமும் பித்தும் பீடிக்கும். அன்றைய நாளில்  தவறிய உன் பாகத்தை தேடியடைந்து  உன் முழுமைக்காக ஏங்குவது போல..

தந்திரமாக ஒருநாள் ஏமாற்றிய பிறகு  சந்திரனின் பித்து மறுபடி துவங்கும் நம் பிறப்புக்காக...

நிலா, Moon

நம்புமாறு புனையப்பட்ட கதை - அது  நீயொரு வெண்ணை உருளை என்று பின்னர் நம்ப வைக்கப்பட்டது - யாரோ உன் மேல் கால் தடம் பதித்தார் என்றும் மாந்தரின் மாபெரும் பாய்ச்சல் அதுவென்றும்...

திரிபு கொள்ளும் உன் வடிவியலைக் கண்டு தனிமையான அந்தி வேளையெல்லாம் கழித்தேன் எதனால் செய்யப்பட்டாய் நீ? என்னை உருவாக்க ஏது உன் பணி? விந்தையோடு விசாரித்திருந்தேன்

என் உடலின், என் உணர்வின்  சுற்றுப்பாதையின் உருவாக்கம்  யாதென்றறிய எத்தனித்த போது  போலி ஒளியால் குருடான என் கண்களுக்கு பிடிபடாமல் உன் வடிவத்தை மாற்றினாய்

உள்ளொளியின் துணை கொண்டு இருளை என் கண்கள் கண்ட போது   மாறும் உன் வடிவத்தின்   மர்மங்கள் பலவற்றின்  முகத்திரையை விலக்கினேன்

பிரதிபிம்பமே நீ -  மாதரின் திரவங்களைக் கையாண்டு என் பிறவியை இயக்கும் திறன் கொண்டாய் என் மரணத்திலும் பங்காவாய்

என்றும் என் உணர்தலின் சுழல் கதவாய் நீ உள்ளாய்

நிலவு கவிதை, Moon poem

தகிக்கும் நிலவின்  தணியாத பித்து -  அதை உள்ளடக்கி... நிலா தன்னுள் ஒளித்த புதிரான மர்மங்களின்  மூலமுமாகி...

நிலவின் குளிர்ச்சி - அதன்  முடிவற்ற பொழிவானேன்

எனதன்பின் வேட்கை  கொடிய நஞ்சை உண்டது நிலவின் முழுமையில்

முழுநிலவின் அருளொளியில் முழுவதுமாய் கரைந்துபோக மற்றொரு அன்புத்துணையை கைவிட்டேன்

ஆண்டவன் அருள் என்மேலிருந்தால் முழுநிலவின் மகோன்னதத்தில் இந்த கூட்டை உதிர்த்துவிடுவேன் 

கதிரவன் கவிதை, Sun poem

செம்மையான பூமி ஒரு பசுமையான இலை ஒரு வண்ணமயமான பட்டாம்பூச்சி ஒரு பறவையின் மென்மையான கீச்சொலி மேகங்களற்ற நீல வானம் இவையனைத்தும் தூய்மையான ஒளியின் மாயமே

சூரியக்கிரணங்கள்

சூரியக்கிரணங்கள் கவிதை, Sun beams poem

சூரியக்கிரணங்கள் உருண்டோடுகின்றன செங்குத்தாயிருக்கும் பலகணியின் ஊடே... சாய்ந்திருப்பதே அவற்றின் தேர்வு இறக்கத்திற்கும் வடிவமைப்பிற்கும்.... சாத்தியமில்லாத அர்த்தமற்ற வடிவ அமைப்புகள் அர்த்தங்களால் கறைபடாத ஒரு அதிசயம் வெறுமையாய் அமைதியாய் என்னை ஆக்குகிறது

மூடுபனி கவிதை, Mist poem

காலைப்பனி ஒருவகை  ஒருமையை கொணரும். விண்ணையும் மண்ணையும்  ஒருசேர நடனமாட வைக்கும் எது எது, யார் யார் என்ற எல்லைகளை அழிக்கும் அனைத்தையும் ஒன்றாகக் கலக்கும் மென்பனியின் மாயம்

வானவில் கவிதை, Rainbow Poem

நீ கருப்பா, பழுப்பா, வெளுப்பா, சிவப்பா  அல்லது, சரிவர இயங்கும் மூளை கொண்டாயா? ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திலும்  வகை வகையாய் தேடுகின்றாய் தோலின் நிறங்களை மட்டும் நிராகரிக்கின்றாய்  உன் செருக்கைப் பார்

சொர்க்கத்தின் கடவுள் பற்றி  அறிவிக்கின்றாய் போற்றுகின்றாய்  ஆனால் அவர் படைப்பை மட்டும்  எதிர்க்கின்றாய் நிராகரிக்கின்றாய்

அறிவற்ற வெறுப்பால் நம் சொந்தக் குருதியால் நனைய வைக்கவில்லையா இப்பூமியை நீ?

ஓ, மனிதனே! அன்பு இதயத்தின், இயங்கும் மூளையின் பாதையில்  எழுந்து நின்று நீ நடைபோடுவாயா?

கோடைக்காலம்

கோடைக்காலம், Summer

பூக்களின் நறுமணம்  பறவைகளையும் தேனீக்களையும் பரபரப்பாய் களிப்போடு வைக்கும்

சிள்வண்டுகள் பகல் இரவாக  ஜீ என சத்தமிடுவது ஏதோ ஒன்றை பெற்றதை அல்லது தொலைத்ததைப்பற்றி   தவழ்ந்து வரும் தென்றலின் தயக்கம் தாங்கி வந்த குளிர்ச்சியை பரப்புவதற்கா தனக்குள்ளேயே அதை வைப்பதற்கா

நீ நறுமணமாய் இருக்கலாம் அல்லது நாறும் கழிவாய் இருக்கலாம்  தொலைக்கலாம் அல்லது அடையலாம்  பகிரலாம் அல்லது உதிர்க்கலாம்

கோடை மழை, Summer Rain

கறுத்து வீங்கிய முகத்தோடு மேகம் கண்ணீர் விடத் தயாராய் இருப்பதாக தெரிகிறது அழத்தான் வேண்டும் கட்டாயமாக அவன் 

கண்ணீர் வடித்தான் தன் சுமை நீக்கி இலகுவாக மாற  களிப்புற்று புவி உயிர்கள் பாடினர் ஆடினர்

அருள்பெற்ற ஒவ்வொரு துளியும்  ஆதாரமாகும் உயிர்க்கு 

டென்னசியில் உள்ள மரங்களுக்கு...

டென்னசியில் உள்ள மரங்களுக்கு..., To Trees in Tennessee

ஓ! அருள்பெற்ற உயிர்களே! உம் பச்சை மேலாடை எம் மூச்சின் இருப்பின் ஆதாரமாய் ஆனது  உம் துறவுக் கோலம்  உயிரற்ற இருப்பென்ற தவறான புரிதலானது உம் மகத்தான இருப்பு  மாந்தரின் புலன்களிலிருந்து தப்பிடக்கூடும்

இப்புரிதல் இல்லாமல் போனால் பேரழிவின் விளைவாக அது ஆகும் - ஆனால் நீங்களும் நானும் இப்போதைக்கு நெருக்கமான இந்த தழுவலில்... ஒருவர் மூச்சை ஒருவர் பகிரும் இன்பம் மூச்சிறைக்கும் காதலி தரும் இன்பத்திலும் பேரின்பம்

நன்றியால் பெருகிய கண்ணீர் கொண்டே நான் உமக்கு ஊட்டம்தர முடியும்

பனிக்காலத்தில் நான் திரும்பி வருகையில் போர்த்திய ஆடையற்று சாம்பல் நிறம் கொள்வீர் நீவிர் குதூகலிக்காமல் போனால் உலகம் இவ்வாறே இருக்குமெனக் காட்டுவீர்

நீவிர் ஒரு நிரந்தரவாசி  நானோ அலைந்து திரியும் பரதேசி - ஆனால் என் மூச்சின் உறவை என்றும் உடைக்கவும் இயலுமோ? என் வேலைகளை நான் முடிக்கும் வரை காத்திருப்பீர் உம் வேர்களில் நான் முடிவாய் கிடப்பேன் என் உடலின் சாறால் உம்மை வளமாக்குவேன் -  உம் நடுத்தண்டின் உயிர் சாறாய் மாறுவதற்காக அவளுடையது அனைத்தையும் மறுபடி  அவள் மடியில் கிடத்துவதற்காக

அதுவரை நீங்களும் நானும்  இந்தக் காதல் விளையாட்டை எவரும் பாராத வண்ணம் எந்த ஆரவாரமுமின்றி தொடர்ந்திருப்போம்

அவை விடும் வெளிமூச்சினை

மரங்கள் கவிதை, Trees Poem

அவை விடும் வெளிமூச்சினை உள்மூச்சாய் கொள்கிறோம் நட்பின்றி கூட நாம் வாழ்ந்திடலாம்  ஆனால் நம் வாழ்வு இந்த உறவில் பின்னிப்பிணைந்தது

மலைகள் மாளா வலிதரும்

மலைகள் கவிதை, Mountains Poem

மலைகள் மாளா வலிதரும் முழங்கால்களுக்கு, உங்களை சோர்ந்திடச்செய்யும் ஆனால் அவை கொணரும் மகிழ்வும் ஆனந்தமும் இவ்வனைத்தையும் ஆக்கும்  கிறக்கமான பேரானந்தமாய்... 

மலைகள் ஒரு மனிதனின் அளவுகோல்

மலைகள் கவிதை, Mountains Poem

மலைகள் ஒரு மனிதனின் அளவுகோல் -  எவ்வளவு சிறிய, மிகச்சிறிய, சிறப்பற்றவர் என்றோ எவ்வளவு தெம்பு, திடம், தோல்வியற்றவர் என்றோ

மலைகள் உங்களை  உருவாக்கவோ உடைக்கவோ முடியும்

யால்பாங் கவிதை, Yalbang Poem

முரட்டுத்தனமான மலை முகடு ஏளனமாக என்னை நோக்கிடும் காலத்தை வென்ற உறைந்த விவேகத்தின் முகத்தோடு

கல்லில் பொறிக்கப்பட்ட ஞானம்  ஆனால் அது என்றும் மாறும்  எந்த இறவா கை அல்லது கண்  இந்த தலைசிறந்த வடிவியலற்ற படைப்புகளை  அழகாக அச்சில் வார்க்க முடியும்

சமவெளியின் சுகத்தில் சரணடைந்தோருக்கு மலையின் கடுமை வரவேற்பதாய் இருக்காது

மலையில் நடக்கக்கூடியவற்றின் அச்சுறுத்தல்கள்  வாழ்வின் இன்பங்களைத் தள்ளி வைத்த  துறவிகளுக்கு உரியது

ஆனால் மலையின் பித்தில் நீங்கள்  அகப்பட்டுக் கொண்டால் அதன் கவரும் ஈர்ப்பு புதிய இடம் தேடுவோரையும் சாகசம் செய்வோரையும் மட்டுமல்ல விவேகமிக்க துறவிகளையும் ஞானிகளையும் ஈர்க்கும்

மலைகள் பின்விளைந்த பள்ளத்தாக்குகள் அவற்றின் புதிரான வலைக்குள் இருப்பது உயிர் உருவாக்கும் மூலத்தின் கருவில் மீண்டும் இருப்பதற்கு மிக நெருங்கியது

பித்து, மாயம், அதிசயம்  அனைத்தும் சாத்தியம் மலைகளில்....

கரும்பு, Sugarcane

அன்பின் வலியில் உள்ள இனிமை அதை உணர வெகுதூரம் செல்லும்  உன் இதயம்

கடினமான கரும்பு சீனியின் இனிமையை எப்படியோ பெற்றது

ஆனால்,  இக்கடினம் இனிமையை தருவது கொடுமையாய் பிழிவதால் மட்டுமே...

எனக்கன்பான உன்னை கொடுமைப்படுத்தும் திண்ணம்  எனக்கில்லை எனினும்

கடினமான உன் மேலுறை உன் இனிமை ஊற்றெடுக்காமல் தடுக்கிறது எனில், உனை சுருக்கில் பிடிப்பதற்கு எந்த ஐயமும் இல்லை எனக்கு - உன்னை இனிமையாய் மாற்றுவதற்கு எப்போதும் இனிமை இருந்துள்ளது போல

இராஜ நாகம் கவிதை, King Cobra Poem

அசைந்து நெளிந்து  அவனுக்கேயான மாயத்தை  அவன் நெய்கிறான் மரணத்தைத் தரும் கொடியதானான் எனினும் இறைமையின் தேர்வானான்

நேர்த்தியும் நஞ்சும் ஒருங்கேயென இம்மந்திர வடிவம் கொண்டான் எந்த கரத்தால் கண்ணால் இதை செய்விக்க வல்லான்

அவன் காதல் மிகப்பிரபலம்  அவன் நஞ்சோ வாழ்விலிருந்து விடுவிக்கும்  உடனடி நிவாரணம்  ஆதாமுக்கு வசியம் - ஆனால்  ஞானியின் வசீகரம் மயக்கும் அவன் பார்வை  மரணத்துக்கோ வாழ்வுக்கோ  அழைப்பென கொள்ளலாம்

உன் நஞ்சு எனை  வாழ்விலிருந்து குணமாக்கியது உன் நஞ்சு எனை  மரணத்திலிருந்து காத்தது அனைத்திலும் மேலாய், உன் நஞ்சு என் அறியாமையை கரைத்தது

என் வாழ்வுக்கும் அன்புக்கும்  ஆபத்தானாய் நீ - ஆனால்  என்றும் உனை போற்றாமல்  என்னால் இருக்கத்தான் இயலுமா

சந்தம், Lilt

வெக்கையான ஒரு வெயிற்கால மதியம் - தரு தந்த நிழலில் படுத்திருக்க பழ ஈக்கள் மந்தமாய் முரலொலிக்கும். பட்டாம்பூச்சியின் படபடப்பு அச்சூழலுக்கேற்ப பதமாக மெதுவாகும். அயன மண்டல வெயிற்கால  மந்தமான மதிய நேரம் ஒன்றில்.

கிளை கொப்பு இலைகளின் நேர்த்தியான வடிவியல் - நோக்கிய வண்ணமிருந்தேன் அதன் மாயத்தை... அனைத்துக்கும் மேலாய் இந்த  அதிசயக் குழப்பத்தின் ஊடே  ஆர்வத்தோடு உள் நுழைந்த ஆதவனின் கதிர்கள் கண்டேன்

கிடந்திருந்த புற்தரையோடு கலந்து ஒன்றிணையும் விருப்பத்தில்  சுத்த உயிரின் பரவசத்தில் - என் உள்ளம் சிலிர்க்கிறது

தொடர்புடைய பதிவுகள்:

சத்குருவின் பூமி கவிதைகள்

பூமி, மண் , மண்வளம் , மண்வாசனை - இவற்றின் ரகசியங்களை , நுட்பங்களைப் பேசும் சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...

சத்குருவின் கவிதைகள் தமிழில்

கவிதைகள் என்றாலே ஆழமான ஒரு கருத்தை சுவையோடு புரிய வைப்பவை. ஒரு ஞானி கவிஞராகவும் இருப்பது எவ்வளவு அற்புதம்! வாழ்வின் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை அழகியலோடு வெளிப்படுத்தும் சத்குருவின் கவிதைகள் இங்கே உங்களுக்காக.

குறிப்பு:  "மண் காப்போம்" என்பது சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள உலகளாவிய இயக்கம். இவ்வியக்கம், உலகெங்குமுள்ள மக்களை மண் ஆரோக்கியத்திற்காக ஒன்றுகூடி குரல்கொடுக்க ஊக்கப்படுத்துகிறது, விவசாய மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க தேசிய அளவிலான கொள்கைகள் உருவாக்கவும், செயல்படவும் அனைத்து தேசத் தலைவர்களுக்கும் துணைநிற்கிறது.

இதற்காக சத்குரு அவர்கள் தனியாக மோட்டார்சைக்கிளில் 25 நாடுகள் வழியாக 30,000 கிமீ தூரத்திற்கு 100 நாட்கள் பயணம் மேற்கொண்டார். லண்டனில் துவங்கி இந்தியாவில் நிறைவடைந்த இப்பயணத்தில் மக்களையும் தலைவர்களையும் நிபுணர்களையும் அவர் சந்தித்தார். இவ்வியக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

மனித நேயம் கட்டுரை | Manithaneyam Katturai in Tamil

Manithaneyam Katturai in Tamil

மனித நேயம் காப்போம் கட்டுரை | Humanity Katturai in Tamil

மனிதநேயம் கட்டுரை: இந்த உலகில் தனியாக யாரும் வாழ முடியாது. ஒருவருக்கொருவர் உதவி செய்து மனிதநேயத்துடன் இருந்தால் தான் உந்த உலகத்தில் வாழ முடியும் . மனிதன் என்பது வெறும் வார்த்தையல்ல. இயற்கையினுடைய மிகப்பெரிய படைப்பு. மனிதநேயம் என்றாலே மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது அன்னை தெரசா, ஹெலன் கெல்லர், நெல்சன் மண்டேலா போன்ற பெண்மணிகள் தான். ஏன் இவர்களை மட்டும் கூறவேண்டுமென்றால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதையும் உலகத்திற்காக அர்பணித்தவர்கள். அந்த அளவிற்கு நம்மால் போகமுடியவில்லை என்றாலும் நமக்கு எதிரே நடக்கும் நிகழ்வுகளில் உதவி தேவைப்படுவோருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வந்தாலே அதுவே ஒரு மனித நேயம் தான். நமது உலகத்தில் மனித நேயம் என்பது ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகம் எப்போதோ அழிந்திருக்கும். சரி வாங்க நண்பர்களே மனிதநேயம் குறித்து கட்டுரை (manithaneyam katturai in tamil) பார்க்கலாம்.

மனிதநேயம் கட்டுரை | மனிதநேயம் பற்றிய கட்டுரை:

குறிப்பு சட்டகம்:.

மனிதர்கள் என்பவர்கள் பிறப்பினால் அனைவரும் சமம் என்பதாகும். மற்றவர்கள் மீது உயர்வு தாழ்வுகள் இல்லாமல் அனைவரின் மீதும் அன்பு செலுத்துபவனே உண்மையான மனிதனாவான்.

மனிதநேயம் என்றால் என்ன:

மனிதநேயம் கட்டுரை: உலகில் வாழக்கூடிய முகம் தெரியாத நபர்கள் நம்மை பார்த்து சிரிப்பது கூட ஒரு மனிதநேயம் தான். மனிதநேயம் என்பது சக மனிதர்களின் மீது பாசம் வைப்பது, கருணை, இரக்கம் காட்டுவது போன்றதாகும். மனிதர்கள் என்றாலே அவர்களுக்கு பிரச்சனை இருப்பது இயல்புதான். அந்த பிரச்சனைகளை பார்த்துவிட்டு அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியினை செய்யலாம், பசியால் வாடுபவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம், தாகத்தில் தவிப்பவர்களுக்கு நீர் கொடுத்தல், இது போன்ற மனிதநேயமிக்க செயல்களை செய்தால் மனிதருக்குள் ஒற்றுமை நிலை அதிகரிக்கும்.

தமிழர்கள் இருந்த வரலாற்றில் மனிதநேயம்:

சுயநலம் இல்லாமல் பிறர் நலத்தினை காக்க வேண்டும் என்பதில் நம் தமிழர்கள் முன்னோடியாக விளங்கியவர்கள். மனிதநேயத்திற்கு மிகவும் எடுத்துக்காட்டாக விளங்கிய நூல் திருக்குறள் . மேலும் மனுநீதி சோழன் ஒரு பசுவின் கன்றிற்காக தன் மகனையேதண்டித்தவன், சிபி சக்கரவர்த்தி புறாவுக்காக தன் உடலையே தானம் செய்ததும், பாரி மன்னன் முல்லைக்காக தேர் கொடுத்தமையும், பேக மன்னன் மயிலிற்காக போர்வை அளித்ததும் வரலாற்றில் மாறாது இருந்து வந்த தமிழர்களின் மனிதநேயம் ஆகும்.

வளர்ந்து வரும் மனிதநேயம்:

முன்னெல்லாம் பிறந்தநாள் விழாவினை தன் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவதையே விரும்புவார்கள். இப்போதெல்லாம் அந்த நிலை மாறி ஆதரவற்றோர் விடுதிகளில் இருக்கும் குழந்தைகளோடு கொண்டாடவே பெரும்பாலானோர் விரும்புகிறாரக்ள். இந்த அளவிற்கு மனிதநேயமானது மாற்றம் அடைந்துள்ளது.

மனிதநேயம் உயர்வாக உள்ள மனிதர்கள் இதயத்தால் யோசித்து புத்தியினால் அதை உணரவும் செய்வார்கள். அடுத்தவர்களுடைய குடும்பத்தை மாசில்லாத மனதோடு பார்ப்பது கூடு மனிதநேயம் தான். இதுபோன்ற மனிதநேயத்தை பற்றி கூறினால் அளவிற்கு அதிகமாக சொல்லிக்கொண்டே போகலாம். மனிதநேயத்திற்கு இணையான பொருளோ, செல்வமோ இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. அதனால் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதநேயத்தை காத்து மனிதநேயத்துடன் இருப்போம்..நன்றி வணக்கம்..!

ஆசிரியர் தினம் பற்றிய சிறப்பான கட்டுரை

ஆசிரியர் தினம் பற்றிய சிறப்பான கட்டுரை

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil | ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil |  ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

IMAGES

  1. Nature Essay in Tamil

    essay about nature in tamil

  2. Importance Of Planting Trees Essay In Tamil

    essay about nature in tamil

  3. Importance Of Planting Trees Essay In Tamil

    essay about nature in tamil

  4. Beauty Of Nature Essay In Tamil

    essay about nature in tamil

  5. Nature Essay In Tamil

    essay about nature in tamil

  6. Importance Of Planting Trees Essay In Tamil

    essay about nature in tamil

VIDEO

  1. Organic விவசாயம் மிகப்பெரிய ஆபத்தா !

  2. Road trip #travel #nature Tamil Nadu

  3. நீரின்றி அமையாது உலகு|தமிழ் கட்டுரை| Essay| Tamil Essay

  4. Nature tamil songs #farming #vivasayi #statustamil #shorts

  5. Nature

  6. இயற்கை|Class 2-5|எளிய வரி கட்டுரை|Short Essay| Tamil Essay| Iyarkai

COMMENTS

  1. Nature Essay in Tamil

    Nature Essay in Tamil - இயற்கை கட்டுரை - நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை ...

  2. இயற்கை பற்றிய கட்டுரை

    Essay on Nature By / June 1, 2023 இயற்கை என்பது நாம் வாழும் கிரகத்தின் துடிப்பு.

  3. தமிழில் இயற்கைக் கட்டுரை

    தமிழில் இயற்கை பற்றிய குறுகிய மற்றும் நீண்ட கட்டுரை

  4. இயற்கை வளம் கட்டுரை

    பாரதியார் பற்றிய 10 வரிகள் - 10 Lines About Bharathiyar in Tamil Sathya Priya | August 6, 2024 6:41 pm August 6, 2024 7:05 pm ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil | ஜவகர்லால் நேரு ...

  5. இயற்கை

    இயற்கை (ஒலிப்பு ⓘ) (nature) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு ...

  6. இயற்கை பாதுகாப்பு கட்டுரை தமிழ்

    Save Nature Essay In Tamil. பொதுவான கட்டுரைகள் ... Save Nature In Tamil; இயற்கை பாதுகாப்பு ...

  7. இயற்கையை பாதுகாப்போம்

    New Smart Tamil is a blog that contains general knowledge-related articles in the Tamil language. New Smart Tamil was founded in September 2018 by Ganeshan Karthik. Get in Touch with Our Social Media

  8. இயற்கையின் 10 வரிகள்

    இயற்கையின் 10 வரிகள் - 10 Lines on Nature - WriteATopic.com. இயற்கையின் 10 கோடுகள்: மரங்கள், செடிகள், விலங்குகள், பூக்களின் நறுமணம், பழங்களின் இனிப்பு ...

  9. இயற்கை வளங்கள் கட்டுரை

    இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே ...

  10. காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil

    காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் ...

  11. தமிழ் கட்டுரைகள்

    தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal). Find tamil essays in tamil language at eluthu.com.

  12. இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்

    இந்த பதிவில் "இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்" பதிவை ...

  13. இயற்கை வளம்

    மழை காடு உள்ள பாடு-ஹிவ,மார்குயிஸ் என்ற உள்ள தீவு ஆனது எந்தவித தொந்தரவும் இல்லாத இயற்கை வளம் ஆகும்.

  14. Save nature

    கருவறை முதல் கல்லறை வரை வாழ்வியல் முறைகள்அனைத்தும் இயற்கையை ...

  15. பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி

    Already people are suffering because of global warming. Man leads a life away from nature which is not at all good, he told. English; ... Subscribe to Oneindia Tamil. நெல்லை: பூமியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள் கையில் ...

  16. தமிழ் கட்டுரைகள்|Tamil Katturaigal

    மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil :- உணவே மருந்தாக உண்டு வந்த காலம் சென்று உணவே நஞ்சாக மாறிவிட்ட காலத்தில் ...

  17. ஐம்பூதங்கள்

    இப்பிரபஞ்சமும் அனைத்து ஜீவராசிகளும் பஞ்சபூதங்கள் அல்லது ...

  18. மரம் கட்டுரை -essay about trees in Tamil-Maram katturai

    radangfx March 8, 2021. Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை மனிதனின் ...

  19. Thiruvalluvar'S Observation on Nature: a Study on The Classical Tamil

    Thiruvalluvar, a classical and celebrated Tamil poet, was probably born between 4 th and 1 st. century BC. Government of Tamilnadu has approved that he was born in 31 BC. at Thirumailai (Presently ...

  20. இயற்கை ஓர் அறிமுகம்

    This video explains Nature in Tamil & English. After watching this video. You will know about nature.இந்த காணொளி தமிழ் மற்றும் ...

  21. Nature writing in Tamil

    Nature writing in Tamil. Going through some old papers the other day, I came across some of Theodore Baskaran's writings that I had marked here and there for use in this column on the occasion ...

  22. சத்குருவின் இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature)

    சத்குருவின் இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature) இயற்கையின் ...

  23. மனித நேயம் கட்டுரை

    மனிதநேயம் கட்டுரை: உலகில் வாழக்கூடிய முகம் தெரியாத நபர்கள் நம்மை பார்த்து சிரிப்பது கூட ஒரு மனிதநேயம் தான். மனிதநேயம் என்பது சக ...